×

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருப்புத்தூர், அக்.2:  திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீனாள்வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். ஆணையாளர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். உதவியாளர் விஜயராகவன் அஜந்தா அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியக்கவுன்சிலர்கள் கருப்பையா, சரவணன், கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், பாக்கியலெட்சுமி, சகாதேவன், ராமேஸ்வரி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர் பழனியப்பன் பேசுகையில், கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி முழுமையாக கணக்கு எடுக்கப்படவில்லை. அதை முழுமையாக எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, அந்த கணக்கு விபரங்களை அந்தந்த ஊராட்சி நிர்வாகிகள் எடுப்பார்கள் என்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(பொது) செழியன் நன்றி கூறினார்.

Tags : Panchayat Union Committee Meeting ,
× RELATED ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்