×

வீரர்கள் அதிர்ச்சி மேலூர் அருகே சூறைக்காற்று 30 ஏக்கர் கரும்பு, வாழை சேதம்

மேலூர், அக். 2: மேலூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக மாலையில் சுமார் 1 மணிநேரம் மழை பெய்து வருகிறது. மேலூர் அருகே சருகுவலையபட்டி ஊராட்சியில் உள்ள வடக்கு வலையபட்டி, சருகுவலையபட்டி கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென சுழல் காற்று வீசியது. சுமார் அரை மணிநேரம் நீடித்த இக்காற்றால் இப்பகுதியில் பயிரிடப்பட்ட 20 ஏக்கர் கரும்பு, 10 ஏக்கர் வாழை, 1 ஏக்கர் பப்பாளி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் ஊராட்சி தலைவர் அருந்தேவி ராமனாதன், ஞானசம்பந்தன், மாதவி உள்பட 5 பேரின் வீடுகள் சேதமடைந்தது. 3 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்து தரையில் சாயந்ததால், நேற்று முன்தினம் போன மின்சாரம் நேற்று வரை வரவில்லை. மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட வாழை, கரும்பு, பப்பாளி மற்றும் வீடுகளை உடனடியாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரி’கை விடுத்துள்ளனர்.

Tags : Soldiers ,Melur ,storm ,
× RELATED மாநில செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்