×

காலம் அநீதியின் கையில் கட்டுண்டதாக வரலாறு இல்லை


மதுரை, அக். 2: காந்தியடிகளின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கென இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தி–்ல ஆண்டுதோறும் மலரஞ்சலி நிகழ்வு நடத்துவது வழக்கம். ஆனால், இந்த மலரஞ்சலி நிகழ்ச்சி ரத்தாகி இருக்கிறது. இதற்கு மதுரை எம்பி, வெங்கடேசன், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட தனது சமூக வலைப்பக்கங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடத்த வேண்டிய மலரஞ்சலி நிகழ்வை, கொரோனாவை காரணங்காட்டி ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இன்னும்.. செய்யுங்கள். ஆனால் காலம் அநீதியின் கைகளில் என்றென்றும் கட்டுண்டு கிடந்ததாக வரலாறும் இல்லை, புராணங்களும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...