×

நாமக்கல்லுக்கு நீடாமங்கலத்திலிருந்து 2,500 டன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், அக்.2: நீடாமங்கலத்திலிருந்து நாமக்கல்லுக்கு பொது விநியோகத்திட்டத்திற்கு 2500 டன் அரிசி நேற்று சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கூத்தாநல்லூர், திருத்துறைபூண்டி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்த நெல்களை தனியார் முகவர்களிடமிருந்து அரசு பெற்று அரவை செய்த அரிசிகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி மற்றும் வட்ட கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
சேமித்து வைத்த அரிசி மூட்டைகள் மற்றும் தாலுக்கா பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைத்துள்ள நெல்மூட்டைகள் அரவைக்கும், அரிசி மூட்டைகள் பொது விநியோக திட்டத்திற்கும் நீடாமங்கலத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில் பெட்டிகளில் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி, வட்ட கிடங்குகள் மன்னார்குடி, கோவிலூர், ஆதனூர், பெருகவாழ்ந்தான் பகுதிகளியிலிருந்து 2,500 டன் சன்ன ரக அரிசி மூட்டைகளை 200 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 42 சரக்கு ரயில் பெட்டிகளில் தொழிலாளர்கள் ஏற்றி நாமக்கல்லுக்கு பொதுவிநியோகத் திட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Namakkal ,Needamangalam ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்