×

கொரோனா தடுப்பு பணியிலிருந்த துப்புரவு பணியாளரை தாக்கிய 2 பேருக்கு வலை

இலுப்பூர், அக்.2: அன்னவாசலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளரை தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். அன்னவாசல் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ராமன் மகன் சண்முகம் (45). இவர் நேற்று அன்னவாசல் - புதுக்கோட்டை சாலை தனியார் மண்டபம் அருகே வாகனத்தில் வருபவர்களை முககவசம் அணியாமல் வருபவர்களை முக கவசம் அணிய சொல்லி பேரூராட்சி ஊழியர்களுடன் விழிப்புணர்வு ஏர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 இளைஞகளை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிய சென்னார். அப்போது வாகனத்தில் இருந்த 2 இளைஞர்களும் சண்முகத்தை தாக்கி விட்டு பைக்கில் தப்பி விட்டனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து போலிசார் தப்பி ஓடிய வீரப்பெருமாள் பட்டியை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் ஒரு இளைஞரை தேடி வருகின்றனர்.

Tags : cleaner ,
× RELATED திண்டுக்கல், கொடைக்கானல் சிறைகளில்...