×

அறந்தாங்கியில் பாபர் மசூதி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, அக்.2: பாபர் மசூதி வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து தமுமுக சார்பில் கோட்டைப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்ட செயலாளர் ஜகுபர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அபுசாலிகு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாபர்மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என சேர்க்கப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஜ்மல்கான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கிரீன்முகமது, மாவட்ட துணைச் செயலாளர் நவாஸ்கான், நிர்வாகிகள் ஜலீல்அப்பாஸ், பைசல்அஹமது, மாநில மீனவரணி செயலாளர் செய்யது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Babri Masjid ,Aranthangi ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...