×

பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு

பெரம்பலூர், அக்.2: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப் புணர்வுப் புத்தகத்தை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் வெளியிட்டார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் நேற்று (1ம் தேதி) காவல் நிலையத்தில் உள்ள குழந்தை நல அலுவலர்களுக்கு குழந்தைகளின் நல சட்டம் மற்றும் குழந்தைத் திருமணத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விழிப்புண ர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட (குழந்தை கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு) ஏடிஎஸ்பி நீதி ராஜ் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எவ்வாறு பிரச்னைகள் ஏற்படுகிறது எனவும், குழந்தைகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு, பெ ண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருச்சி சரக டிஐஜி காவல் துறை ஆனி விஜயா உருவாக்கிய கேடயம் திட்டம் மற்றும் அதற்கான தொடர் பு எண்களான 6383071800, 9384501999 ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்து, குழந் தைகளுக்கு அரசால் ஏற்ப டுத்தப்பட்டுள்ள நலத் திட்ட ங்கள் அடங்கிய புத்தகத் தை வெளியிட்டார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சமுக நல அலுவலர் தமீமுன்னிசா, மகிளா சக்தி கேந்திரா திட்டம் ஜெயந்தி, மகளிர் நல அலுவலர் மற்றும் ஒருங்கி ணைந்த சேவை மைய நிர்வாகி கீதா, குழந்தைத் திருமணம் தடுப்பு அலுவலர், ரூபிகா, கிராம முக்கிய சேவிகா சாந்தி, வரதட்சணை பாதுகாப்பு அலுவலர் முத்துசெல்வி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur SP Office ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...