×

காரைக்காலில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா

காரைக்கால், அக்.2: காரைக்காலில் நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2604ஆகவும், பலி எண்ணிக்கை 42 ஆக உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனோ தொற்று வேகமாக பரவி வருகிறது. காரைக்காலில் நேற்று முன்தினம் வரை கொரோனோ தொற்று 2,525 ஆகவும், பலி எண்ணிக்கை 42 ஆகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் நேற்று முடிவுகள் வந்தது. இதில் மேலும் 79 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டது. 1837 பேர் சிகிச்சை முடிந்து வீடு நிலையயில் 722 பேர் அரசு பொது மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Corona ,Karaikal ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...