×

பாதிப்பு எண்ணிக்கை 2,604 ஆக உயர்வு கொள்ளிடம் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி

கொள்ளிடம்,அக்.2: கொள்ளிடம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த நெப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி லட்சுமி (80). இவர் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் அருகே மாதானம் அருகே உள்ள செருகுடி கிராமத்தில் உள்ள தனது மகள் கஸ்தூரி வீட்டில் தங்கி இருந்துள்ளார். நேற்று அதிகாலை அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது மழையின் காரணமாக குடிசை வீட்டின் பக்கவாட்டில் உள்ள மண் சுவர் மழையின் காரணமாக ஈரமாகி இருந்த நிலையில் இடிந்து விழுந்துள்ளது.

இடிபாட்டில் சிக்கிய லட்சுமி படுகாயம் அடைந்தார் உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தகவலறிந்த சீர்காழி தாசில்தார் ரமாதேவி, மண்டல துணை தாசில்தார் விஜயராணி வருவாய் ஆய்வாளர் தென்னரசு,விஏஓ மதியழகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : victims ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்