×

அரவக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவர் மீது போக்சோவில் வழக்கு

அரவக்குறிச்சி, அக். 2: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 70 வயது முதியவர் மீது சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அருந்ததியர் காலனியைச் 8 வயசு சிறுமி நேற்று முன் தினம் மாலை தெருவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சிறுமி திடீரென மாயமானார். சிறுமியை தேடியபோது அதே பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் வீட்டில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...