×

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படிகளை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக்.2:  ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள டெலிபோன் பவன் முன் உலக முதியோர் தினம், உலக ஓய்வூதியர் தினத்தையொட்டி அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் குப்புசாமி கலந்து கொண்டு பேசினார். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படிகளை உடடினயாக வழங்க வேண்டும். ரயில்வேயில் உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்ற கட்டணத்தை மருத்துவமனைகளுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், போக்குவரத்து தொழிற்சங்க ஓய்வூதியர் சங்க தலைவர் லோகநாதன், தபால் ஓய்வூதியர் சங்க தலைவர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,pensioners ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்