×

புதுவையில் ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, அக். 1: புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 491 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது:  புதுச்சேரியில் நேற்று 4,938 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-382, காரைக்கால்-76, ஏனாம்-23, மாகே-10 என மொத்தம் 491 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 3 பேர், காரைக்காலில் ஒருவர் என 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.89 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 27,544 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,074 பேர் (80.14 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் புதுவையில் 348 பேர், காரைக்காலில் 81 பேர், ஏனாமில் 29 பேர் என மொத்தம் 458 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

புதுவையில் 2,532 பேர், காரைக்காலில் 474 பேர், ஏனாமில் 88 பேர், மாகேவில் 40 என 3,134 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுவையில் 1,497 பேர், காரைக்காலில் 155 பேர், ஏனாமில் 103 பேர், மாகேவில் 60 என 1,815 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,949 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,84,810 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,53,736 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,Puduvayal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...