×

நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் செலுத்த கூடுதல் வசதி

விக்கிரவாண்டி, அக். 1: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்க மருத்துவக்கல்லூரியில் கூடுதல் வசதி செய்யப்பட்டு வருகிறது.இதுபற்றி மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி கூறியதாவது:மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றால் 324 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டனர். மகப்பேறு துறைத்தலைவர் ராஜேஸ்வரி, டாக்டர் வில்வபிரியா, டாக்டர் தங்கமணி ஆகியோரின் சிறப்பான கவனிப்பு காரணமாக 19 பெண்கள் சுகப்பிரசவமும், 71 பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றனர்.

கொரோனா நோய், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் மூச்சுத் திணறலுடனும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவுடனும்  அனுமதிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு ஆக்சிஜன்தேவையான அளவுக்கு அதிநவீன கருவிகள் மூலம் செலுத்தி வருகிறோம். தற்போது தமிழ்நாடு சேவை கழகத்திலிருந்து 27 கருவிகளும், மாவட்ட கலெக்டர் நிதியில் இருந்து 2 கருவிகளும் பெறப்பட்டு 32 கருவிகள் இருப்பில் உள்ளன.ஆக்சிஜன் தேவை பயன்பாடுகள் அதிகமாகியதால் மருத்துவமனையில் இருந்த 6 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் கிடங்கு, 10 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் கிடங்காக மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.மருத்துவமனையில் தற்போது கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகமாவதால் மருத்துவமனையில் 24 கிலோ லிட்டர் திரவஆக்சிஜன் கிடங்காக மாற்றப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மயக்கவியல் துறை பேராசிரியர்கள் முருகேசன், ரவிக்குமார், தர்மலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : facility ,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை