×

2 கவுன்சிலர்கள் 3 கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாதபடி இடைநீக்கம்

துறையூர், அக்.1: துறையூர் ஊராட்சி ஒன்றியக்குழு அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தமயந்திபிரபு முன்னிலை வகித்தனர். கடந்த 25ம் தேதி நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் எழுதும் நோட்டில் ஒன்றிய குழு தலைவரின் அனுமதி இல்லாமல் தீர்மானங்களை எழுதிய 4வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் அசோகன், 10வது வார்டு தேமுதிக கவுன்சிலர் சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் கோரப்பட்டது.

இவர்களை அடுத்த 3 கூட்ட தொடர்களில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 11 உறுப்பினர்களும் எதிராக 5 உறுப்பினர்களும் வாக்களித்ததை அடுத்து 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடுத்த 3 கூட்டத்தொடர்களுக்கு 2 உறுப்பினர்களும் கலந்துகொள்வதற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். நிறைவாக ஒன்றிய குழு துணைத்தலைவர் புவனேஸ்வரி தங்கையன் நன்றி கூறினார்.

Tags : councilors ,meetings ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை