×

பாபர் மசூதி இடிப்புக்கான தீர்ப்பு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.1: பெரம்பலூரில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி யின் சார்பாக கண்டன ஆர் ப்பாட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் கிரிமினல் குற்றம் என தீர்ப்பளித்த பாபர் மசூதி இடிப்புக் குக் காரணமான குற்றவாளிகளை சிறையில் அடைக்க வலியுறுத்தி பெரம்ப லூரில் பழையபஸ்டாண்டு காந்தி சிலையின் முன்பு எஸ்டிபிஐ காட்சியின் சார் பாக நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்கனி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜாசரீப் கண்டன உரை ஆற்றினார். மாவட்ட செய லாளர் முஹம்மது பிலால், மாவட்ட துணைத் தலைவர் முஹம்மதுபாருக் ஆகியோ ர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக நேற்று வெளியான தீர்ப்புக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப் பட்டது. இதில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags : protests ,STPI ,demolition ,Babri Masjid ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்