×

பாபர்மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

அரவக்குறிச்சி, அக்.1:பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்புநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி ஷாநகர் கார்னரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கட்சியின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சாதிக் தலைமை வகித்தார். இதில் லிங்கமநாயக்கன் பட்டி 3வது கவுன்சிலர் சேக்பரித் கண்டன உரையாற்றினர். தொகுதி செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : protests ,STPI ,Babri Masjid ,
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...