×

போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர், அக்.1: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பான அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பிலான ஆர்ப்பாட்டம் தொமுச மாண்டல தலைவர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், 14வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையை தொழிற்சங்கங்களுடன் உடனே துவக்க வேண்டும். அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். பஸ்கள் குறைவான தூரம் இயக்குவதை காரணம் காட்டி அலவன்ஸ்களை குறைக்கக் கூடாது. குறைந்த பயணிகளுடன் இயக்கப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டும். கொரோனா சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சொந்த விடுப்பில் கழிக்கக் கூடாது என்ற கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி செயலாளர் பாண்டியன், தேமுதிக செயலாளர் ஜோசப், பார்வர்ட் பிளாக் செயலாளர் பாண்டி உள்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,start ,contract negotiations ,Transport Corporation ,
× RELATED பொதுமக்கள் வௌியே செல்ல அச்சம் கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில்