×

கொரோனா மனஉளைச்சலால் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போடி அருகே பரிதாபம்

போடி, அக். 1: தேனி மாவட்டம், போடி அருகே ரெங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் அறிவானந்த பாண்டியன்(22). இவர் கடந்த ஆண்டு போடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்தார். மனஉளைச்சலில் இருந்த அவர் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். தற்செயலாய் வீட்டுக்கு வந்தவர்கள் அறிவானந்த பாண்டியன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து போடி புறநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் வந்த போலீசார் தூக் கில் தொங்கியவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அறிவானந்த பாண்டியன் எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில்,`` கிட்னியில் கல் அடைப்பு பாதிப்பும், கிரிக்கெட் விளையாடிய போது முழங்கால் உடைந்தும் அவதியடைந்தேன். வேலை தேடுவதற்காக போட்டித் தேர்விற்கு படிக்க சென்னை சென்று கோச்சிங் சென்டரில் படித்தேன். கொரோனா ஊரடங்கால் ஊருக்கு வந்தேன். மனஉளைச்சல் அதிகரிப்பால் விரைவில் பைத்தியமாகி விடுவேன் என்று தோன்றியதால் தற்கொலை செய்து கொண்டேன். இதற்கு யாரும் காரணமல்ல’’ என அறிவானந்த பாண்டியன் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Corona ,teenager ,suicide ,pity ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...