×

ஆண்டிபட்டியில் சாரல் மழை

ஆண்டிபட்டி, அக்.1: ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்னியபிள்ளைபட்டி, ஆசாரிபட்டி, மொட்டனூத்து, ஏத்தக்கோவில், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் மானாவாரி பயிர்களை பயிரிட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Andipatti ,
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...