×

தொண்டையில் கடலை சிக்கி குழந்தை பலி

வேடசந்தூர், அக்.1: வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய். இவரது ஒன்றரை வயது மகள் தர்ஷனா திங்கள்கிழமையன்று வீட்டில் கடலைபருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கடலை பருப்பு குழந்தை தர்ஷனாவின் தொண்டையில் சிக்கியது. இதனால் மயங்கிய குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தை நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வடமதுரை போலீஸ்சார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : baby ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி