×

கார், வேனில் கடத்திய ₹3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் ₹12 லட்சத்துடன் 6 பேர் கைது திருவண்ணாமலை அருகே போலீஸ் சோதனையில்

திருவண்ணாமலை, செப்.30: திருவண்ணாமலை அருகே கார் மற்றும் மினிவேனில் கடத்தி வந்த ₹3 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 6 பேர் ைகது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை- செங்கம் சாலை வழியாக, கார்களில் குட்கா மற்றும் பான்மசாலா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை தாலுகா இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, செங்கம் சாலை பெரியகோளாப்பாடி பஸ் நிலையம் அருகே வேகமாக வந்த கார் மற்றும் மினிவேன் நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் அந்த வாகனங்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் மூட்டைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் பதுக்கி கடத்தியது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு, ₹3 லட்சமாகும். மேலும், அந்த வாகனங்களில் ₹12 லட்சம் பணமும் இருந்தது. எனவே, பான்மசாலா பொருட்கள், வாகனங்கள் மற்றும் ₹12 லட்சம் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பெரியபாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்த கந்தன்(43), கண்ணன்(22), அய்யம்பாளையம் பாலாஜி(41), சமுத்திரம் காதர்(49), நவுசாத்அலி(41), துர்கைநம்மியந்தல் முருகதாஸ்(30) ஆகியோர் 6 ேபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : police raid ,Thiruvannamalai ,
× RELATED சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை