×

கள்ளக்காதலியின் 8 வயது மகளுக்கு பாலியல் தொல்லை சமையல்காரர் போக்சோவில் கைது செல்போனிலும் வீடியோ எடுத்த கொடூரம்

திருவண்ணாமலை, செப்.30: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அண்ணா நகரை சேர்ந்தவர் ஜாவித்(30). ஓட்டலில் சமையலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் வேறொரு பெண்ணுடன் ஜாவித்துக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தெரிந்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, ஜாவித்தை கண்டித்தார். ஆனாலும், கள்ளத்தொடர்பை கைவிட ஜாவித் மறுத்துவிட்டார். அதோடு, கடந்த 7 மாதங்களாக கள்ளக்காதலியுடன் தனியாக குடும்பமும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலியின் 8 வயது மகளுக்கு, ஜாவித் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு, அதை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த கொடூரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலி, திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் தமிழரசி, வாலிபர் ஜாவித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags : Chef ,
× RELATED ‘சாய்’ மைய சமையல்காரர் கொரோனாவுக்கு பலி