×

மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய வேண்டும் 102 வயது முதியவர், கோட்டாட்சியரிடம் மனு

கோவில்பட்டி, செப்.30: தன்னை கவனிக்காததால் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் 102 வயது முதியவர் மனு அளித்தார். குறுக்குசாலை ஜெகவீரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி (102). முன்னாள் ராணுவ வீரரான இவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  எனக்கு 4 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எனது சொத்தை கடந்த 2019ம் ஆண்டு மூத்த மகனுக்கு எழுதி கொடுத்தேன். அவர் என்னை கவனிக்கவில்லை. தற்போது மகள் குருவம்மாள் வீட்டில் இருந்து வருகிறேன். எனக்கான சாப்பாடு மற்றும் மருத்துவ செலவுகளை எனது மகளே செய்து வருகிறார். எனவே என்னை கவனிக்காததால் மகன் பெயருக்கு எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய வேண்டும். சொத்தில் மகள்களுக்கும் பங்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்று கொண்ட கோட்டாட்சியர் விஜயா, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : Kottayam ,
× RELATED கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது