×

வள்ளியூர் தெப்பக்குளத்தில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் ஒத்திகை

நெல்லை, செப். 29:  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவுப்படியும்  நெல்லை கலெக்டர் ஷில்பா வழிகாட்டுதலின் பேரிலும் நெல்லை, தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில் கடந்த சில வாரங்களாக அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, பேட்டை, கங்கைகொண்டான், பாளை. ஆகிய பகுதிகளில் ஆறுகள், குளங்களில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று வள்ளியூர் தெப்பக்குளத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த், நிலைய அலுவலர் பிரதீப்குமார், போக்குவரத்து நிலைய அலுவலர் சந்தானபிச்சை மற்றும் வள்ளியூர் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 40 கமாண்டோ வீரர்கள் படகுகளில் சென்று நீரில் தத்தளிப்பவர்களை எவ்வாறு காப்பாற்றி முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து காட்டி பொதுமக்களுக்கு விளக்கம் நடத்தினர்

Tags : firefighters ,Valliyoor Theppakulam ,
× RELATED வாலாஜாவில் விளையாடியபோது தலையில்...