×

பெரியார் சிலையை அவமதித்தை கண்டித்து தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 29:  திருச்சி மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலையை காவி சாயத்தை பூசி அவமரியாதை செய்ததை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் திராவிட கழகத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில், பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.க. மாவட்ட செயலாளர் மணிமாறன், இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷன், தி.மு.க. நடேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : TK ,Periyar ,
× RELATED கர்நாடக துணை முதல்வருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்