×

மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், செப்.29: விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம்-பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில், நகர திமுக பொறுப்பு குழு தலைவர் மாணிக்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொறுப்பு குழு துணைத்தலைவர்கள் ஜெகநாதன், இளவரசன், திமுக பொறுப்பாளர் செல்வம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் ஈஸ்வரன், கார்த்திகேயன், மதிமுக விஸ்வநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் பஸ்நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொருளாளர் குமார், குளோப்ஜான், வினோத், மணிவாசகம், பூபதி, ஜிம்செல்வம், வடிவேல், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெப்படையில் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி, செல்வராஜ், நடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலாம்பாளையம் பேரூர் திமுக சார்பில் காவேரி ரயில் நிலையத்தில் பேரூர் செயலாளர் கார்த்திராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக நிர்வாகிகள் பாபு, பொன்னுசாமி, செவத்தியப்பன், திருவேங்கடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படைவீடு பச்சாம்பாளையத்தில், பேரூர் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் படைவீடு பெருமாள் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட், கொமதேக, காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவில், ஒன்றிய திமுக சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், ஒன்றிய செயலாளருமான ராமசுவாமி தலைமை வகித்தார். இதில் அவைத்தலைவர் கருப்பணன், ஒன்றிய துணை செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ்குமார்    உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ராசிபுரம்: ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில், நகர செயலாளர் சங்கர்  தலைமையில் மதிமுக நகர செயலாளர் ஜோதிபாசு, சிபிஎம் மாவட்ட செயலாளர் கந்தசாமி, சிபிஐ நகர செயலாளர் மணிமாறன், விசிக நகர செயலாளர் ஆதவன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி அருகில், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் செல்வம், வனிதா செங்கோட்டையன், பூபதி, ராஜேந்திரன், சிவகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெண்ணந்தூரில் ஒன்றிய செயலாளர் துரைசாமி, கண்ணன், கொமதேக ஜெயக்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில் பேரூர் பொறுப்பாளர் ராஜேஸ் தலைமையிலும், பிள்ளாநல்லூரில் பேரூர் பொறுப்பாளர் சுப்ரமணியம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Demonstrations ,allies ,DMK ,district ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...