×

மூதாட்டி வீட்டில் 13 பவுன் திருட்டு

கமுதி, செப்.29: கமுதி அருகே மூதாட்டியிடம் 13 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கமுதி அருகே மேலவில்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்திருளாயி(63). இவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திருவிழாவிற்காக வந்திருந்தார். நேற்று முன்தினம் வீடுபுகுந்த மர்ம நபர்கள் மூதாட்டி வீட்டில் வைத்திருந்த 13 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் முத்திருளாயி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : theft ,house ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது