×

மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

அருப்புக்கோட்டை, செப். 25: அருப்புக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற திட்டத்தின் மூலம் இணையவழியில் திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசுகையில், ‘அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதியில் முதற்கட்டமாக இணையவழி உறுப்பினர் சேர்க்கையை துவங்கி உள்ளோம். இந்த சிறப்பு முகாமில் 30 வயதிலிருந்து 40வயதிற்குட்பட்ட இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். பெண்களையும் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அரசு மீதும், மத்தியில் ஆளக்கூடிய மோடி அரசு மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவது உறுதி.அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கோஷ்டி பூசல் ஆரம்பித்துவிட்டது. திமுகவில் முதல்வர் வேட்பாளர் தலைவர் ஸ்டாலின் தான்.

எனவே தேர்தல் வேலைகளை துவக்க வேண்டும்’ என்றார். இதில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், தெற்கு மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், இளைஞரணி கேகேஎஸ்எஸ்ஆர்.ஆர்.ரமேஷ், நகர திமுக செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலசந்தர், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், ஒன்றிய துணைத்தலைவர் உதயசூரியன், ஒன்றிய இளைஞரணி அழகுராமானுஜம், ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தசாமிநாதன், பண்டாரச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : central ,governments ,state ,
× RELATED வடமாநிலத்தில் இருந்து சென்ட்ரலுக்கு...