×

சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடம் விண்ணப்பிக்க வாய்ப்பு

ராமநாதபுரம், செப்.25:  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் 31.8.2020 வரை காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் ஆகியோர்களுக்கான காலிப்பணியிட விபரம் இனச்சுழற்சி ஒதுக்கீட்டுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் விளம்பரம் செய்யப்படும். அமைப்பாளர் பணிக்கான தகுதிகள்: இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் நாளில் (1.9.2020)ல் கல்வித் தகுதி: பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பழங்குடியினர் 8வது தேர்ச்சி, தோல்வி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது நிரப்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது நிரப்பியவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரம்பியவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பிற தகுதிகள்: நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே 3 கிலோ மீட்டா; சுற்றளவிற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...