×

பாலத்தில் பைக் மோதி பூசாரி பலி

கேடிசி நகர், செப். 25:  நெல்லை அருகே பால தடுப்புச்சுவரில் பைக் மோதி கோயில் பூசாரி பலியானார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கணேசன் மகன் கண்ணன்(46). கோயில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது சகோதரர், ஏரல் அருகேயுள்ள சிவகளையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக கண்ணன், நேற்று முன்தினம் சிவகாசியில் இருந்து நெல்லை வழியாக ஏரல் நோக்கி பைக்கில் சென்றார். கருங்குளம் பாலப் பகுதியில் சென்றபோது தடுப்புச்சுவரில் பைக் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Priest ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...