×

புதுவையில் இதுவரை இல்லாத புதிய உச்சம் ஒரே நாளில் 668 பேருக்கு தொற்று 77.57 சதவீதம் பேர் டிஸ்சார்ஜ்

புதுச்சேரி, செப். 25: புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று 668 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 5,945 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-533, காரைக்கால்-99, ஏனாம்-27, மாகே-9 என மொத்தம் 668 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 4 பேர், காரைக்காலில் 2 பேர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.96 சதவீதமாக உள்ளது.

 புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 24,895 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19,311 பேர் (77.57 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் புதுவையில் 347 பேர், காரைக்காலில் 31 பேர், ஏனாமில் 37 பேர், மாகேவில் 3 ேபர் என மொத்தம் 418 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். புதுவையில் 2,669 பேர், காரைக்காலில் 486 பேர், ஏனாமில் 105 பேர், மாகேவில் 20 என 3,280 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,097 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Puduvayal ,
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...