×

மாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்

மதுரை, மார்ச் 20: மதுரையில் மாநகராட்சி எக்கோ பார்க் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர லேசர் நீரூற்று ஷோ நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதன் எதிரொலியாக காட்சிகள் நிறுத்தப்பட்டு, பூங்கா பூட்டப்பட்டுள்ளது. இப்பூங்காவின் சுற்றுச்சுவரில் அழகிய வண்ணமலர்களின் ஓவியங்கள் மாநகராட்சி சார்பில் தற்போது வரையப்பட்டுள்ளது.

Tags : corporation ,
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...