×

திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

திருமங்கலம், மார்ச் 20: திருமங்கலம் அருகே திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த இளம்பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து. விவசாயி. இவரது மகள் சண்முகபிரியா(22). மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இந்தநிலையில் சண்முகபிரியாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சண்முகபிரியா
பெற்றோரிடம் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இருப்பினும் திருமணஏற்பாடுகள் நடைபெறவே மனமுடைந்த சண்முகபிரியா நேற்று முன்தினம்இரவு வீட்டை விட்டு வெளியேறி மேலக்கோட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார்.

Tags : Teenager ,suicide ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை