×

கோயில்களில் காவலர் பணிக்கு மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

திருவாரூர், மார்ச் 19: திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் காவலர் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாவட்டம் முழுவதும் உள்ள உள்ள திருக்கோயில்களில் இரவு நேர காவல் பணிக்கு, 71 காலியிடங்கள் முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது.இதற்கு 62 வயதிற்குட்பட்டவராகவும், நல்ல உடல் தகுதி உள்ளவர்களாகவும் இருக்கும் விருப்பம் உள்ள முன்னாள் படைவீர்ர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ 04366 290080 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Maj ,Soldiers ,temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு