×

களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை

களக்காடு, மார்ச் 19:  களக்காடு அருகே உள்ள மாவடி எம்எஸ்எஸ் நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் பாபின் (22). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது தாயார் கன்னிகா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாபின், கடந்த 15ம் தேதி களக்காடு ரோட்டில் உள்ள நீர்த்தேக்க தொட்டி அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி பாபின் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Worker suicide ,Kalakkad ,
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு