×

கொரோனா வைரஸ் காரணமாக கூடங்குளம் அணுஉலை பணிகளை நிறுத்த வேண்டும்

நெல்லை, மார்ச் 19:  திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1வது மற்றும் 2வது அலகில் மின் உற்பத்தி பணிகள் நடந்து வருகிறது. 3, 4, 5 மற்றும் 6வது அணுஉலைகள் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. இதில் பணிபுரியும் கட்டுமான ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்தினர் 10 ஆயிரம் பேர் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசித்து வருகின்றனர்.
ஷிப்ட் முறையில் இயங்கும் அணுமின் திட்டத்தில் அதிகமாக ஒப்பந்த ஊழியர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் வள்ளியூர், ராதாபுரம், நாகர்கோவில், செட்டிகுளம் போன்ற பகுதிகளில் தங்கி தினமும் இங்கே கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு செல்வதும், வருவதுமாக உள்ளனர். தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே கொரோனா பரவுமா? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே கொரோனா பீதி நீங்கும் வரை அணுஉலை கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் இப்பகுதியில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : plant ,Kudankulam ,
× RELATED கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு