×

ரயில் பயணிக்கு கத்திக்குத்து: ரவுடி கைது

சென்னை: தி.நகர் ரங்கநாதன் தெரு வழியாக மாம்பலம் ரயில் நிலையத்துக்கு விஜயகுமார் (40) என்பவர் கடந்த 13ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் ரயில் நிலைய படிக்கட்டில் ஏறும்போது, எதிரே வந்த ஒரு வாலிபர், விஜயகுமாரிடம் திடீரென தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த விஜயகுமாரை பொதுமக்கள் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விஜயகுமார் கொடுத்த புகாரின் படி போலீசார் ரங்கநாதன் தெருவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அப்போது, தி.நகர் எஸ்.பி.கார்டன் பகுதியை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ரவுடி விக்கி (எ) கொரிவிக்கி (எ) விக்னேஷ் (23) என தெரியவந்தது.  இதைதொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை சின்னமலை சர்ச் அருகே அவரை கைது செய்தனர்.

Tags : rail passenger ,arrest ,Rowdy ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...