திருமங்கலம், மார்ச் 19: திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவரது மனைவி கெப்திகா(24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமங்கலம் மருத்துவமனைக்கு சென்றுவருவதாக கூறி சென்ற கெப்திகா அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்காததால், ஆஸ்டின்பட்டி போலீசில் விக்னேஷ்வரன் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.