×

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த 2 மான்கள் விடுவிப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 19:கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான்களை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்கு பிறகு, தொகரப்பள்ளி காப்புக்காட்டில் விடுவித்தனர். கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி கிராமத்தில் போலுமலை மலையடிவாரத்தில் உள்ள விவசாய கிணற்றில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வயதுடைய மானும், நேற்று 15 வயதுடைய மானும் தவறி விழுந்தன.

இதனை மீட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்தனர். இதையடுத்து, 2 மான்களையும் கிருஷ்ணகிரி வனச்சரகர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் தொகரப்பள்ளி காப்புக்காட்டிற்குள் கொண்டு சென்று விடுவித்தனர். அப்போது வனவர்கள் பிரவின்ராஜ், அண்ணாதுரை, ஹேமலதா, வனக்காப்பாளர்கள் கங்கைஅமரன், ரகமத்துல்லா, சிவக்குமார், வனக்காவலர் கணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்