×

ஊருணிக்குள் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி

மதுரை: மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்(27), சித்திக்(27), கார் டிரைவர் வேல்பாண்டியன்(27), வீரபாண்டி(27), முத்துப்பாண்டி ஆகியோர் நேற்று காரில் அச்சம்பட்டி முல்லை பெரியாற்று கால்வாயில் குளிக்கச் சென்றனர். அங்கிருந்து திரும்பியபோது அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கூம்பூர் குண்டூரணிக்குள் கார் திடீரென கவிழ்ந்தது. அவ்வழியாக வந்த சோழவந்தான் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அதற்குள் அரவிந்த், சித்திக் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாயினர். மற்ற 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்….

The post ஊருணிக்குள் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Oruni ,Madurai ,Aravind ,Siddique ,Velpandian ,Veerapandi ,Muthuppandi ,Madurai, Sellur ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி