×

கும்பகோணம்- தஞ்சை இடையே சாலையோரம் குவிந்துள்ள மண்ணால் மக்கள் அவதி

பாபநாசம், மார்ச் 18: கும்பகோணம்- தஞ்சை இடையே சாலைகளை ஆக்கிரமித்துள்ள மண்ணால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை முக்கியமான நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையில் தினம்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகத்தின் மோசமான பராமரிப்பில்லாத சாலைகளில் இதுவும் ஒன்றாகும். சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருபுறம், குண்டும், குழியுமான சாலை மறுபுறம் என்று வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதில் சாலையோரம் மண் குவிந்து கிடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் பாதி சாலையை மண்ணே ஆக்கிரமித்திருப்பதால் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் புழுதியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் அடுத்த தாராசுரத்தில் துவங்கி தஞ்சை வரை சாலையோரங்களில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...