×

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கும்பகோணம், மார்ச் 18: கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட கிளை கூட்டம் நடந்தது. வட்ட துணை தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார், மாத அறிக்கையை செயலாளர் முத்தலீப், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ராமமூர்த்தி வாசித்தனர். மாவட்ட பொருளாளர் அய்யப்பன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே அறிவிக்க வேண்டும். கோடை காலத்தை பயன்படுத்தி அனைத்து ஆறுகள், குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : district ,Government Employees Union ,Kumbakonam ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!