×

பின்பக்க கதவை உடைத்து விவசாயி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

பாபநாசம், மார்ச் 18: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உள்ள கண்டகரையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (45). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டி விட்டு மனைவியை பைக்கில் ஏற்றி சென்று வெளியூருக்கு பஸ் ஏற்றி விட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. உள்ளே பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆளில்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் கதவை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்