×

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

பொன்னமராவதி, மார்ச் 18: பொன்னமராவதி அருகே பகவாண்டிப்பட்டி மற்றும் தொட்டியம்பட்டி ஊராட்சிகளில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையினை அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள் சார்பில் முன்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதேபோல மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் ஜெஜெ நகரில் உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுகாதார ஆய்வாளர் உத்தமன் தலைமையில் கிருமிநாசினி கைதெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது. பொன்னமராவதி காவல் நிலையம் முன்பு வாளியில் தண்ணீர் வைத்து அருகில் சோப்பு வைத்து கை கழுவிக்கொண்டு காவல்நிலையத்திற்குள் அனைவரும் வரவேண்டும் என இன்ஸ்பெக்டர் கருணாகரன் கொரோனோவைரஸ் தடுப்பு பணியினை கடைபிடித்தார்.

Tags : government ,health centers ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...