×

இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் நோய் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு

வேதாரண்யம், மார்ச் 18: வேதாரண்யம் நகராட்சி பகுதியில் நோய் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு பணி நடந்தது. வேதாரண்யம் நகராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, மேலாளர் மன்சூர், மற்றும் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர். நகராட்சி அலுவலகத்தில் துப்பரவு பணியாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆணையர் பிரதான்பாபு அறிவுறுத்தினார்.

மேலும் வேதாரண்யம் பேருந்து நிலையம், ராஜாஜி பூங்காவில் உள்ள பேருந்து நிறுத்தம், இசேவை மையம், போன்ற பல்வேறு இடங்களில் நோய் தடுப்பு கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்பு நகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நோயின் அறிகுறி, கொரோனா வைரஸ் பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கை சிகிச்சைகள், வெளியிடங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருத்தல் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags : municipality ,People's Party ,Vedaranyam ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...