×

கல்குவாரி ஏலம் ஒத்திவைப்பு

தேனி, மார்ச் 18: தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள 15 சாதாரண வகை கல்குவாரிகளை தனிநபர்களுக்கு டெண்டர் மற்றும் ஏலம் மூலம் குத்தகைக்கு வழங்க இன்று (18ம் தேதி) டெண்டர், ஏலம் நடக்கும் என கனிம வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் கேரளாவில் இதன் பாதிப்பு அதிகம் உள்ளதால், தேனி மாவட்டத்தில் இன்று நடப்பதாக இருந்த கல்குவாரி ஏலம் மற்றும் டெண்டர் விடும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

Tags : auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்