×

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் ரயில், பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கும்மிடிப்பூண்டி, மார்ச் 18: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தலைமையில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி மேற்பார்வையில் 10க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வரும் ரயில்களுக்கு கிருமி நாசினி தௌிக்கப்படுகிறது.

மேலும் நடைமேடை மேம்பாலம், வங்கி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கப்படுகிறது. அதேபோல் கும்மிடிப்பூண்டி பஜாரில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சுய சுகாதாரம் குறித்தும், கை கழுவும் பழக்கம் குறித்தும் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேருராட்சியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் செந்தாமரைச்செல்வி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார்.

Tags : railway ,bus stops ,Kummidipoondi Barracks ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...