×

பாஜ நிர்வாகிகள் பயிற்சி முகாம்

ஊத்துக்கோட்டை, மார்ச் 18: பெரியபாளையத்தில் பாஜ சார்பில் ஊருக்கு செல்வோம், உண்மையை சொல்வோம், உறக்க சொல்வோம்,  என்ற தலைப்பில் மாவட்ட பாஜ  நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர் ஜானகிராமன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் சிதம்பரலிங்கம், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சுந்தரம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பாஜ மூத்த தலைவர் இல. கணேசன் கலந்துகொண்டு, ‘குடியுரிமை சட்டம் குறித்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் ஒரு குழுவுக்கு 5 பேர் வீதம் கிராமங்கள் தோறும் செல்லவேண்டும். அங்கு, குடியுரிமை சட்டத்தால் பாதிப்பு இல்லை என்பது குறித்து விளக்கி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்’ என்றார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘குடியுரிமை குறித்து நன்றாக தெரிந்தும் கூட சில தலைவர்கள் அதை பற்றி தவறாக பிரசாரம் செய்கிறார்கள். சிஏஏ குறித்து  மக்களிடம் 15 குழுக்கள் அமைத்து   தெரியப்படுத்துவோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.   நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்க கூடியது’ என்றார்.  முடிவில், மாவட்ட செயலாளர் நந்தகோபால் நன்றி கூறினார்.

Tags : Baja Administrators Training Camp ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...