×

ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்பு

ஊத்துக்கோட்டை, மார்ச் 18: ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில்,  ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் நீதிபதி பங்கேற்றார். ஊத்துக்கோட்டையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பூண்டி ஒன்றிய கச்சூர் பகுதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஊட்டச்சத்து விழாவை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் தலைமை தாங்கினார்.

வக்கீல் சங்க தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ரமேஷ் குமார், பொருளாளர் முனுசாமி மூத்த வக்கீல்கள் குணசேகரன், பார்த்திபன், வெற்றி தமிழன், வெஸ்லி, பாலசுப்பிரமணியகுமார், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி, வக்கீல்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், கொரோனா பாதிப்பு குறித்தும், அது பரவுவது குறித்தும் விளக்கப்பட்டது. தினமும் கை கழுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இயற்கை உணவு வகைகள், ஊட்டச்சத்து வகைகள்  கண்காட்சிகளாக  வைக்கப்பட்டது.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...