×

கால்வாயில் விழுந்த முதியவர் பலி

திருப்புவனம், மார்ச் 18:  திருப்புவனம் அருகே பிரமனூர் நீர்வரத்து கால்வாயில் விழுந்த முதியவர் பலியானார். திருப்புவனம் அருகே ஏனாதி நந்திதேவன் மகன் ஜோதி (57). திருப்புவனத்திற்கு வந்தவர் இரவில் வைகை ஆற்று பாலம் அருகே உள்ள பிரமனூர் கால்வாய் சுவற்றில் படுத்து தூங்கியுள்ளார். தூக்க கலக்கத்தில் கால்வாயில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருப்புவனம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Tags : canal ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்